அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இன்று குறைதீர் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இன்று குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-09 13:48 GMT
மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்திலும் இன்று (டிச.9) ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, அலைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை காலை 10:00 மணி முதல் மனுக்களாக அளித்து பயன் பெறலாம், என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.