சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து !

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து. பொதுமக்கள் புகார் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.

Update: 2024-03-19 05:51 GMT

குறைதீர்க்கும் கூட்டம் ரத்து

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி, வாரம் தோறும் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுக்களை அளிக்க வசதியாக கலெக்டர் அலுவலக கீழ்த்தளத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் நேற்று பொதுமக்கள் பலர் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுக்களை அளித்தனர். கலெக்டர் பிருந்தாதேவி மனுக்கள் பெட்டியை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
Tags:    

Similar News