நெல்லையில் பள்ளி மாணவனுக்கு தொல்லை கொடுத்த காவலாளி கைது

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-17 02:48 GMT

பைல் படம்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றுபவர் மனக்காவலப்பிள்ளை நகரை சேர்ந்த அருள்ராஜ். இவர் அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இது குறித்து சிறுவனின் பெற்றோர்கள் நெல்லை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் பள்ளி காவலாளி அருள்ராஜை இன்று கைது செய்தனர்.
Tags:    

Similar News