ஆற்காடு பகுதியில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டாஸ்

ஆற்காடு பகுதியில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-05-21 08:53 GMT

குண்டாசில் கைதான வாலிபர்

ராணிப்பேட்டை ஆற்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக ஆற்காடு தாலுகா சக்கரமல்லூரை சேர்ந்த அருணாச்சலம் மகன் நாகராஜ் (28) என்பவரை ஆற்காடு டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசிக்குமார் கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் அவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதியின் பரிந்துரையின் பேரில் நாகராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News