குட்கா கடத்திய நபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

திருவாரூரில் குட்கா கடத்திய நபரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-06-17 06:41 GMT

திருவாரூரில் குட்கா கடத்திய நபரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

திருவாரூர் தாலுகா காவல் நிலைய பகுதியில் பொது மக்களுக்கு கேடு விளைவிக்க கூடிய தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய நீடாமங்கலம் பரப்பன மேடு பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் முனியப்பன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் . மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ் பி பரிந்துரை செய்ததன் பேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News