குட்கா விற்பனை - 3 பேர் கைது

விராலிமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 18.25 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-17 04:48 GMT

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா  

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை போலீசார் கடைவீதிப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த தனசேகர்(48) என்பவரையும், ரங்கசாமி (40) என்பவரிடமிருந்து 16 கிலோ புகையிலைப் பொருள்களையும், குமார் (65) என்பவரிடமிருந்து 2.25 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News