பாரத் நெட் இணையவசதி உபகரணங்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை

பாரத் நெட் இணைய வசதி உபகரணங்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-05 11:39 GMT

மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ 

பாரத் நெட் திட்டமானது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் அதிவேக இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் pop மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், ups,router, rack மற்றும் கண்ணாடி இழை வலையமைப்பு உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகள் ஆகும். உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும், கண்ணாடி இழைகளை துண்டாக்கும் மற்றும் மின் கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடை செய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News