சாத்தூர் அருகே வைகோல் கட்டுகள் தீப்பிடித்து எரிந்து நாசம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டி பகுதியில் வைகோல் கட்டுகள் தீப்பிடித்து எரிந்து நாசமனது.

Update: 2024-02-17 11:06 GMT
எரிந்து நாசமான வைக்கோல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பண்ணையில் இருந்த மாடுகள் அனைத்தும் மேய்ச்சலுக்கு சென்று உள்ளன.

இந்த நிலையில் ராஜேந்திரன் பண்ணை அருகே மாடுகளுக்கு தீவனமாக பயன்படும் வைக்கோலில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் வைக்கோலில் இருந்து அதிக அளவில் புகை வருவதை பார்த்த ஊர்க்காரர்கள் சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் வைக்கோலில் ஏற்பட்ட தீயை உடனடியாக அனைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News