ஒடுவந்தழை சாப்பிட்டவர் சாவு
கள்ளக்குறிச்சி அருகே ஒடுவந்தழை சாப்பிட்டவர் சாவு;
Update: 2024-03-04 04:15 GMT
உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 44. கோயம்புத்துாரில் பேக்கரியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சிறுநீரகத்தில் கல் இருந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த பெரியசாமிக்கு கடந்த சில வாரங்களாக வலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் எஸ்.ஒகையூருக்கு வந்தவர் கடந்த 1ம் தேதி ஒடுவந்தழை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.