கலெக்டர் தலைமையில் அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-20 04:55 GMT
கலந்தாய்வுக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி அவர்கள், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.