பள்ளி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு

ஷெனாய் நகர் சென்னை பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமை எம்.எல்.ஏ மோகன் துவக்கி வைத்தார்.

Update: 2024-03-14 03:16 GMT

துணிப்பைகள் வழங்கிய எம்.எல்.ஏ 

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அண்ணாநகர் மண்டலம், ஷெனாய் நகரில் உள்ள சென்னை பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியருக்கு நோய்த் தொற்றுத் தடுப்பு, நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் குப்பைகளை முறையாக வகைப்பிரித்து வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமினை அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் தொடங்கி வைத்து, மாணவியருக்கு துணிப்பைகளை வழங்கினார். இம்முகாமில், மாமன்ற உறுப்பினர் மெட்டிலா கோவிந்தராஜன், மண்டல அலுவலர் பரிதா பானு, சுகாதாரக் கல்வி அலுவலர் சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலர் ஷீலா, ரிபல் புட்ஸ் தென்னிந்தியத் தலைவர் குலின் ஷா, தலைமை ஆசிரியை சின்ன வெள்ளைத்தாயி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News