பரமத்திவேலூரில் கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

பரமத்தி வேலூர்  பகுதிகளில் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2024-06-07 14:15 GMT

பரமத்தி வேலூர்  பகுதிகளில் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவியது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை காற்றுடன் கூடிய கனத்த மழை பரமத்தி வேலூர் தாலுகாவான ஜேடர்பாளையம், சோழசிராமணி  கபிலர்மலை,பாண்டமங்கலம், பொத்தனூர்,வேலூர்,பரமத்தி,வசந்தபுரம்,கந்தம்பாளையம் உள்ளிட்ட  பகுதிகளில்  மாலை முதல் இரவு முழுதும் மழை பெய்தது இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அதேபோல் இன்றும் சுமார் ஒரு மணி நேரமாக  கனமழை பெய்தது.
Tags:    

Similar News