தூத்துக்குடி மாநகரில் மழை
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 19ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலாட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு முதல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை மையம் தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19 ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுத்து ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது இதைத்தொடர்ந்து இன்று இரவு முதல் தூத்துக்குடி மாநகர பல்வேறு பகுதிகளான சிவன் கோவில் பகுதி அந்தோணியார் கோவில் போக்கிரி காய்கறி சந்தை பகுதி பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்