வந்தவாசியில் பலத்த மழை!
வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
Update: 2024-05-20 03:18 GMT
மழை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது திடீரென பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால்,வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.