அருப்புக்கோட்டையில் கொட்டித் தீர்த்த மழை

அருப்புக்கோட்டையில் இன்று மாலை இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு கனமழை பெய்தநிலையில், வெப்பம் தணிந்ததால் போதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2024-05-10 15:24 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை வேளையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து அருப்புக்கோட்டை நகர் பகுதி, காந்திநகர், பாளையம்பட்டி, புறவழிச் சாலை, திருச்சுழி ரோடு, ராஜீவ் நகர், தேவாடெக்ஸ் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது.

திடீரென பெய்த கன மழை காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சியடைந்த மக்கள் சிலர் மழையில் குளித்து மகிழ்ந்தனர்.‌ கடுமையான வெப்ப தாக்கத்தில் இருந்து வந்த மக்கள் தற்போது பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News