வடசென்னையில் கனமழை : சாலைகளில் தேங்கிய மழைநீர்.

வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென செய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2024-06-19 04:08 GMT

வடசென்னையில் மழை

திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம், மணலி மற்றும் எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ச்சியான காற்றுடன் திடீரென இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் வட சென்னையில் இரவு திடீரென குளிர் காற்று மற்றும் மழை பெய்தது. ஒரு மணி நேரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் பணிக்கு சென்றவர்கள் வீடு திரும்ப அவதி அடைந்துள்ளனர். குளிர்ந்த காற்றுடன் மழை காரணமாக தாழ்வான பகுதியிலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
Tags:    

Similar News