மண்ணெண்ணெய் குடித்த குழந்தை மருத்துவமனை அனுமதி !
பொன்னேரி பகுதியில் மண்ணெண்ணெய் குடித்த மூன்று வயது குழந்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டது.
Update: 2024-04-27 06:28 GMT
திருப்பத்தூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் மண்ணெண்ணெய் குடித்த மூன்று வயது குழந்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுமதி. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்து பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பொய்யாமொழி மகன் கவினேஷ் மூன்று வயது குழந்தை வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் குடித்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை விட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.