மின்னல் தாக்கி வீடு சேதம்

கிள்ளியூர் அருகே இடி மின்னலுடன் கனமழை பெய்ததில் மின்னல் தாக்கி வீடு சேதமடைந்தது.

Update: 2024-05-02 01:36 GMT

கிள்ளியூர் அருகே இடி மின்னலுடன் கனமழை பெய்ததில் மின்னல் தாக்கி வீடு சேதமடைந்தது.


குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதமாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கருங்கல் அருகே கிள்ளியூர் மாதாபுரம் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அஜீஸ்குமார் என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியது.இதில், வீட்டின் மேல் பகுதி மற்றும் சுவர் சேதம் அடைந்தது. மேலும் வீட்டில் உள்ள சில எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் சேதம் அடைந்தன . இடியுடன் மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
Tags:    

Similar News