ஏற்காடு அருகே இடி விழுந்து வீடு சேதம்.

Update: 2023-11-08 07:28 GMT

இடி,மின்னல் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஏற்காடு மாரமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூத்து முத்தல் கிராமம், மத்திரிக்காட்டை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (55), இவரது மனைவி தனம் (47),இவர்களுடன் பிள்ளைகள், மருமகள், பேரக்குழந்தைகள் என ஏழு பேர் அந்த வீட்டில் வசித்து வந்தனர், நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது, சுமார் 9.30 மணி அளவில் திடீரென மின்னலுடன் கூடிய இடி இவர்கள் வீட்டின் கூறைமேல் விழுந்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு எழுந்து பார்க்கும் போது இடி தாக்குதலால் வீட்டின் கூரை இடிந்து சரிந்துள்ளது, மின்சார கசிவு ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்து உள்ளே இருந்தவர்களை வெளியே அழைத்து வந்தனர், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமோ ,பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை வெங்கட்ராமனுக்கு மட்டும் இடி தாக்குதலினால் கை, மற்றும் கால் பகுதியை சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்தனர், இதனால் அந்த கிராமத்தில் இரவு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News