மின் கசிவால் வீட்டில் தீ விபத்து - காவல்துறையினர் விசாரணை
தர்மபுரி நகர பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள அஞ்சுகாரன் தெருவில் மின் கசிவால் வீட்டில் தீ விபத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-09 12:15 GMT
தீ விபத்து
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே அஞ்சுகாரன் தெருவில் வசித்து வருபவர் மேகநாதன் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இன்று காலை 11 மணியளவில் மின்சார கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் தீயணைப்பு துறை தகவல் அளித்தும் அவர்கள் தாமதமாக வந்த நிலையில் காவல்துறையினர் தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்பு வந்த தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் வந்த தீயை முழுவதுமாக அணைத்து முடித்தனர். இது குறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.