சிவகாசியில் விடியா திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

சிவகாசியில் விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளர் கே.டி.இராஜேந்திரபாலாஜி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-12 15:49 GMT
திமுக அரசை கண்டித்து போராட்டம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் சிவகாசி மாநகர அதிமுக சார்பில்,தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில்,சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து,

சாத்தூர் சாலை,என்.ஆர்.கே.ஆர்.சாலை, புதுரோட்டு தெரு,அம்பேத்கர் சிலை வரை அதிமுக கட்சியை சேர்ந்த ஆண்,பெண் கட்சி தொண்டர்கள் கை கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக, தமிழகத்தில் போதை பொருட்களை தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்கு திமுக கட்சியினர் சிலரே காரணம் என்றும்,போதை பொருட்கள் கடத்தலில் சிக்கியிருப்பது திமுக கட்சியினர் என்றும், போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனித சங்கிலி போராட்டத்தில், சிவகாசி மாநகர அதிமுக கட்சியின் முன்னனி நிர்வாகிகள் மற்றும் அதிமுக கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News