ரவுடிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - மேலும் ஒருவர் கைது

ஓமலூர் அருகே ரவுடிகள் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-14 09:07 GMT

பன்னீர்செல்வம்

ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் பன்னீர்செல்வம் (வயது 25). பொட்டியபுரம் ஆசாரிப்பட்டறை அண்ணா நகரை சேர்ந்த சேட்டு மகன் விஸ்வநாதன் (23). பிரபல ரவுடிகளான இவர்கள் நண்பர்களாக இருந்தனர். பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்து வந்தன. இந்த நிலையில் பன்னீர்செல்வம், விஸ்வநாதன் வீடுகளின் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த காமலாபுரம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (26) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Tags:    

Similar News