தடுப்புச்சுவரில் மோதிய கார் விபத்தில் கணவன், மனைவி பலி

சங்கரன்கோவில் அருகே கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதில் கணவன் மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

Update: 2024-04-29 11:10 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதில் கணவன் மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் .

திருநெல்வேலி மகாராஜா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவருடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு ஒப்பந்ததாரரான வெங்கடேஷ் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி ஆஷா உடன் ராஜபாளையம் சென்று விட்டு இன்று திருநெல்வேலி நோக்கி தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவில் அருகே உள்ள நெடுங்குளம் விளக்கு பகுதியில் சாலையின் ஓரம் இருந்த தடுப்புச் சுவரில் கார் மோதி கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குட்டையில் தேங்கி கிடந்த நீரினில் மூழ்கி விபத்துக்கு உள்ளானது.

தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் சங்கரன்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் காரின் உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் குமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி காரில் உள்ளே இருந்தவர்களை சடலமாக மீட்டனர். தொடர்ந்து கணவன் மனைவி இருவருடைய உடலை கைப்பற்றிய சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் கார் தடுப்புச் சுவரில் மோதி குட்டையின் கவிழ்ந்த விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்தில் பலியான சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News