பணம் கேட்டு தராத மனைவியை தாக்கிய கணவர் கைது
பணம் கேட்டு தராத மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய கணவர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-31 11:30 GMT
மனைவியை தாக்கிய கணவர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் தினேஷ் வயது 23. இவரது மனைவி கற்பக செல்வி. தினேஷின் கார் பழுதானதால் அந்த காரை பழுது நீக்கம் செய்வதற்கு மனைவி கற்பக செல்வியிடம் பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று கற்பக செல்வி கூறியதால் ஆத்திரமடைந்த கணவர் தினேஷ் கிரிக்கெட் மட்டையால் கற்பக செல்வியை தாக்கியுள்ளார். இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் கற்பக செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷை கைது செய்தனர்.