வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை தாக்கிய கணவர் கைது!

குடியாத்தம் அடுத்த முக்குன்றம் கிராமத்தில் 8 மாத கர்ப்பிணியை வரதட்சணை கேட்டு தாக்கிய கணவர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு.

Update: 2024-03-31 18:14 GMT

காவல்துறை விசாரணை


வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த முக்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 40). கல்லூரி பஸ்சில் டிரைவராக உள்ளார். இவருக்கும் குடியாத்தம் சுண்ணாம்புப்பேட்டை ராஜேந்திர சிங் தெருவை சேர்ந்த கஸ்தூரி (29) என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது கஸ்தூரி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவரிடம் கணவர் வேணுகோபால், மாமியார், கணவரின் சகோதர, சகோதரி ஆகியோர் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கஸ்தூரியை கர்ப்பிணி என்றும் பாராமல் வரதட்சணை கேட்டு சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கஸ்தூரி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து கஸ்தூரியின் கணவர் வேணுகோபாலை கைது செய்தார். மேலும் வேணுகோபாலின் தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் உள்ளிட்ட 3 பேர் மீதும் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News