குடும்ப தகராற்றில் கணவர் தற்கொலை

சிவகாசி அருகே குடும்ப தகராறில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-29 09:01 GMT
சிவகாசி அருகே குடும்ப தகராறில் கணவர் தற்கொலை.போலீஸ் விசாரணை...
சிவகாசி அருகே குடும்ப தகராறில் கணவர் தற்கொலை... விருதுநகர் மாவட்டம், சிவகாசி லிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் மாலைக்கனி (35). இவருக்கு நாகஜோதி (31) என்ற மனைவி உள்ளார்.குடிப்பழக்கம் உள்ள மாலைக்கனி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.இதனால் கணவன்,மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் மனமுடைந்த மாலைக்கனி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.வேலைக்கு சென்று வீடு திரும்பிய நாகஜோதி கணவன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News