மனைவி பிரிந்து சென்றதால் வேதனையில் கணவர் தற்கொலை!

தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

Update: 2024-02-29 08:27 GMT

பைல் படம்

தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் தவசி பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ராமச்சந்திரன் (43). இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு கடந்த ஆண்டு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார்.

இதனால் மன வேதனையில் இருந்த ராமச்சந்திரன் சம்பவத்தன்று விஷம் குடித்துள்ளார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News