வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு!

அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணப்படும் இடத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-06-02 02:54 GMT
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு என்னும் அறைகளில் 14 மேஜைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகளை தேர்தல் பொது பார்வையாளர் சுனில்குமார் ஐஏஎஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ச்சியாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பதிவேட்டில் பொது பார்வையாளர் கையெழுத்திட்டார். அப்போது ஆட்சியர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News