கட்சியினருக்கு பிரச்னை என்றால் முதல் ஆளாக நிற்பேன்- பாஜ மாவட்ட தலைவர்

கட்சியினருக்கு ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என கரூர் பாஜ மாவட்ட தலைவர் செந்தில்நாதன் கூறினார்.

Update: 2024-05-08 12:31 GMT

கட்சியினருக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நான் வந்து நிற்பேன்- பிஜேபி கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உறுதி. கரூர் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி, கரூர் - கோவை சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி பணிமனையில் கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் ஆறுமுகம், கரூர் மேற்கு நகர தலைவர் முருகேஷ், கரூர் தெற்கு மாநகர தலைவர் ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தேர்தலின் போது பணியாற்றிய பூத் ஏஜென்ட்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பான முறையில் தேர்தல் பணி செய்த பூத் கமிட்டி நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்றிய, நகர வாரியாக காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பூத் ஏஜெண்டுகள் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது தங்களுக்கு ஏற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் அவர்களிடையே பேசிய மாவட்ட தலைவர் செந்தில்நாதன், கட்சியின் தலைமை முழு சுதந்திரம் அளித்து கட்சிப் பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. அதே முழு சுதந்திரத்தை உங்களுக்கு அளித்து கட்சி பணியாற்ற கேட்டுக்கொள்கிறேன். என கூறிய அவர், கட்சியினருக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு முதல் ஆளாக நான் வந்து நிற்பேன். அதனால் அச்சமின்றி வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News