காங் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு வருடந்தோறும் ரூ.1 லட்சம் கிடைக்கும்!

காங்., ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு வருடந்தோறும் ரூ.1 லட்சம் கிடைக்கும் என மயிலாடுதுறை காங்., வேட்பாளர் சுதா கூறினார்.

Update: 2024-04-01 09:30 GMT

காங்., ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு வருடந்தோறும் ரூ.1 லட்சம் கிடைக்கும் என மயிலாடுதுறை காங்., வேட்பாளர் சுதா கூறினார்.  

இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை வேட்பாளர் சுதா சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் தீவிர பிரச்சாரம் துவக்கம் நூறு நாள் வேலை சம்பளம் ரூபாய் 400 ஆக உயர்த்தி தரப்படும் மேலும் நூறு நாள் வேலையை நகர் புறத்திலும் வழங்கப்படும் என வாக்குறுதி இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொள்ளிடம் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி சார்பாக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பாக வழக்கறிஞர் சுதா மயிலாடுதுறை பொறுப்பு அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் சட்டமன்ற உறுப்பினர்  சீர்காழி பன்னீர்செல்வம்,   மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் ,மனிதநேய மக்கள் கட்சி ,மக்கள் நீதி மையம் ,மூவேந்தர் முன்னேற்ற கழகம் நிர்வாகிகளுடன் கை சின்னத்தில் வாக்கு கேட்டு திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களிடையே பரப்புரை செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அளக்குடியில் பிரச்சாரத்தை துவங்கி கோதண்டபுரம், புதுப்பட்டினம், தாண்டவன்குளம், ஆச்சாள்புரம், கொள்ளிடம், தைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சுதா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தில் பேசுகையில் ராகுல் காந்தி ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு ஆண்டுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும்,நூறு நாள் வேலை திட்டத்தில் ரூ.400 சம்பளம் உயர்த்தி வழங்கப்படும்,நூறு நாள் வேலை திட்டத்தை நகர் புறத்திலும் வழங்கப்படும்,ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிரந்தரமாக ஆக்கப்படும், மயிலாடுதுறை வளர்ச்சிக்கு பாடுபடுவேன் எனவும் தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Tags:    

Similar News