சட்டவிரோதமாக குட்கா விற்பனை

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்த நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து குட்காவை பறிமுதல் செய்தனர்

Update: 2023-12-30 13:07 GMT

கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பெருந்துறை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் பல்வேறு கடைகளில் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த 21 நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 99,567 ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்து , கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2,10,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.மேலும் குட்கா விற்பனை செய்த கடைகளும் சீல் வைத்தனர்
Tags:    

Similar News