இலுப்பூர் : தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

Update: 2023-12-21 07:25 GMT

நிவாரண பொருட்கள் 

இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் வியாபாரிகள் இடம் இருந்து நிவாரண உதவியாக அரிசி ,கோதுமை, நாப்கின் உள்ளிட்ட ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அனுப்பி வைத்தனர். இதில் வருவாய் அலுவலர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News