பாறைப்பட்டி பகுதியில் பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி ஓட ஓட வெட்டிக் கொலை!

திண்டுக்கல் பாறைப்பட்டி பகுதியில் மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி ஓட ஓட பட்ட பகலில் வெட்டி படுகொலை செய்தனர்.

Update: 2024-02-28 06:20 GMT
திண்டுக்கல் மாநகராட்சியின் 25 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக சிவா என்பவரது தந்தை நாகராஜ் என்ற சரவணன் இவர் தனது வீடான பாறைப்பட்டி பகுதியில் இருந்து மக்கான் தெரு பள்ளிவாசல் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மர்ம நபர்கள் நாகராஜ் மீது மிளகாய் பொடி தூவி உள்ளனர். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த நாகராஜ் எழுந்து ஓட தொடங்கினார். ஆனால் மர்மநபர்கள் அவரை ஓட ஓட பட்டப் பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
Tags:    

Similar News