கள்ளக்குறிச்சியில் மகள் மாயம் தாய் போலீசில் புகார் !

கள்ளக்குறிச்சியில் கோவிலுக்கு சென்ற இளம்பெண் மாயமானதையடுத்து தாய் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-03-21 06:58 GMT

மாயம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டை சேர்ந்தவர் மருதையன் மகள் மகேஸ்வரி,21; பி.காம்., பட்டதாரி. இவர், கடந்த 14ம் தேதி வடலுாரில் உள்ள வள்ளலார் கோவிலுக்கு செல்வதாக பாட்டி பாஞ்சாலையிடம் தெரிவித்து சென்றுள்ளார். அவர் மீண்டும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தாய் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News