ஆத்தூர் : 12 ஆம் ஆண்டு குருபூஜை கால்கோள் நடப்பட்டது

ஆத்தூர் அருகே தெற்கு காடு கோவர்த்தனகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சகுரு மகான் விவேகானந்த சுவாமிகள் ஜீவசமாதியில் பன்னிரண்டாம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு கால்கோள் விழா பூஜை நடைபெற்றது.

Update: 2024-04-01 08:33 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தெற்கு காடு பகுதியில் கோவர்த்தனகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சற்குரு விவேகானந்த சுவாமிகள் ஜீவசமாதி ஆசிரமத்தில் 12 ஆம் ஆண்டு குருபூஜை 08/04/2024 திங்கட்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு கால்கோள் விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கால்கோள் விழாவுக்கான சிறப்பு பூஜைகள் செய்து தீபாரணை நடைபெற்றது இதில் சத்குரு விவேகானந்த சுவாமிகள் ஆசிரமம் நிர்வாகிகள் அப்பகுதியில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News