உத்திரமேரூரில் போதையில் மயங்கியவர் பலி

Update: 2023-12-15 02:38 GMT

உயிரிழப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் மாவட்டம் பேரூராட்சி, வாழைத்தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 40. இவர், உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கூட்டுச்சாலையில் மொபைல்போன் கடை வைத்து உள்ளார். கடந்த 8ம் தேதி இரவு, முருகன் மது அருந்திவிட்டு உத்திரமேரூர் சாலையில், தனியார் உணவகம் ஒன்றின் எதிரே, 'போதை'யில் மயங்கி உள்ளார். மறுநாள் காலையில் உணவக ஊழியர்கள் அவரை எழுப்பிய போதும், அவர் மயக்கம் அடைந்த நிலையிலேயே இருந்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் முருகனை உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததை உறுதிப்படுத்தினர்.
Tags:    

Similar News