விழுப்புரத்தில் வி.சி.க., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, அமைச்சர் பொன்முடி பிரசாரம்

விழுப்புரத்தில் வி.சி.க., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, அமைச்சர் பொன்முடி பிரசாரம் செய்தார்.

Update: 2024-03-30 06:12 GMT

பிரசாரம் 

விழுப்புரத்தில் வி.சி.க., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, அமைச்சர் பொன்முடி பிரசாரம் செய்தார். விழுப்புரத்தில் நேற்று மாலை 5.30 மணிக்கு, விழுப்புரம் நான்குமுனை சாலை சந்திப்பில் திமுக கூட்டணி சார்பில் லோக்சபா தேர்தல் பிரசாரம் தொடங்கியது. தொடர்ந்து பழைய பஸ் நிலையம், மார்க்கெட் வீதி, பெரியார் சிலை, காந்திசிலை, ரயில் நிலைய சந்திப்பு, கீழ்ப்பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளி வாகனம் மூலம் சென்று, இரவு 9 மணி வரை அமைச்சர் பொன்முடி பிரசாரம் செய்தார். வேட்பாளர் ரவிக்குமார் எம்.பி., கவுதமசிகாமணி எம்.பி., எம்எல்ஏ லட்சுமணன், திமுக மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர சேர்மன் தமிழச்செல்வி, காங்கிரஸ் துணை தலைவர் குலாம்மொய்தீன், மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ.,ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கலியமூர்த்தி, சவுரிராஜன், மதிமுக நகர செயலர் சம்மந்தம், விசிக பெரியார், குணவழகன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு, பைக் பேரணியாக சென்று பானை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டனர்.
Tags:    

Similar News