புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-12-27 06:23 GMT
குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பூண்டி கிராமத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் தம்பு தலைமையில் நடைபெற்றது. இந்த புதிய பள்ளி கட்டிடத்தினை காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் ஓரத்தி கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சிவபெருமான், ஊராட்சி மன்ற தலைவர் பழனி வேல்ராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News