பனைபொருள் தயாரிக்கும் தொழில் கூடம் திறப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பனைபொருள் தயாரிக்கும் தொழில் கூடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2024-03-08 08:14 GMT

பனைப்பொருள் விளையாட்டு விற்பனை கூடம் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உடைகுளம் பகுதியில் பனைபொருள் தயாரிக்கும் தொழில் கூடம் மற்றும் விற்பனை அங்காடியை திறந்து வைத்த எம்எல்ஏ தமிழரசி, கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போது பனைத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும், அதன் மூலம் பனை சார்ந்த பொருட்களையும் ஊக்குவித்தால் உள்ளூர் பெண்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என சட்டசபையில் பேசியிருந்த நிலையில் அருகே உள்ள உடைகுளம் பகுதியில் பனைப் பொருட்கள் தயாரிக்கும் தொழில் கூடம் மற்றும் பனைபொருள் விற்பனை அங்காடியையும் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி திறந்து வைத்தார்‌.

Tags:    

Similar News