இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிமனை திறப்புவிழா

காரியாபட்டி பெரியார்நகர்ப் பகுதியில் மாவட்ட செயலாளர் தலைமையில், இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிமனை திறப்புவிழா*

Update: 2024-03-31 15:50 GMT

AIADMK Election Workshop 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பெரியார் நகர்ப் பகுதியில், அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் அவர்களின் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக பொறுப்பாளர்கள் அறிவுறுத்தலின் பேரில் புதிய தேர்தல் பணிமனை திறப்புவிழா நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் புதிய தேர்தல் பணிமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின்னர், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பேசுகையில், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி மற்றும் கழகத்திற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. அதிமுக இயக்கத்தை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை, நம்பாமல் கெட்டவர்கள் தான் அதிகம். அதில் ஒருவர் தான் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார், அவரை வேரோடும், வேரடி மண்ணோடு வீழ்த்தி காட்டுகிற வாய்ப்பு திருச்சுழி தொகுதி மக்களுக்கு கிடைத்துள்ளது. மேலும், இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ஜெயபெருமாள் அவர்களை அறிவித்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நமது வெற்றி வேட்பாளர் ஜெயபெருமாள் அவர்களை வெற்றி பெற செய்ய களப்பணி ஆற்றிட வேண்டும் என்றும் கழக நிர்வாகிகளை அவர் கேட்டுக் கொண்டார். மேலும் இந்த விழாவில் காரியாபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்கள் தோப்பூர் முருகன் மற்றும் ராமமூர்த்தி ராஜ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கே.சிவசாமி, மணிமேகலை, திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், முனியாண்டி, நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், பூமிநாதன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வேங்கை மார்பன், வழக்கறிஞர்கள் ஆவியூர் ரமேஷ், பூமிநாதன் உட்பட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News