ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

Update: 2024-07-15 07:00 GMT

ஆர்.கே.எஸ்., கல்லுாரி

கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் உயர்கல்வி வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லுாரி தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். செயலாளர் கோவிந்தராஜூ வாழ்த்திப்பேசினார். பலகுரல் கலைஞர் ஹரிதேவா, தமிழ் எழுத்தாளர் ஸ்ரீநி, திரைப்பட இயக்குனர் பாலு, கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லுாரி டீன் டாக்டர் நேரு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். புதிய மாணவர்களை கல்லுாரியில் படித்துவரும் இளங்கலை, முதுகலை மாணவர்கள் வரவேற்று பேசினர். கல்லுாரி துறை தலைவர்கள் சக்திபிருந்தா, நர்கீஸ் பேகம், அங்குராஜ், அகமதுசுல்தான், சக்திவேல், அசோக், அருள், சித்ராதேவி, சத்யராஜ், மஞ்சு, பவுலின் சங்கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லுாரி துணை முதல்வர் ஜான் விக்டர் நன்றி கூறினார்.
Tags:    

Similar News