நசியனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நசியனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

Update: 2024-01-04 12:46 GMT

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்

ஈரோடு மாவட்டம் நசியனூரில் அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்சு.முத்துசாமி , ஈரோடு மாவட்டத்தில் 6 நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளுக்கு பயனுள்ள பணியாக இருக்கும் என்றும் படிப்படியாக அறுவடை கூடும் இடங்களில் 51 கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இங்கு முதல் தர நெல் 23 ரூபாய் 10 காசுகளும் பொது ரகத்திற்கு 22.65 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News