குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

Update: 2024-07-15 06:37 GMT
சின்னசேலம் அருகே 3 கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடி, கூகையூர், கனியாமூர் ஆகிய கிராம மக்களின் வசதிக்காக 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 கிராமங்களிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று செந்தில்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், அய்யம்பெருமாள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சீனுவாசன், லட்சுமி சேகர், ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News