சேரன்மகாதேவி ஒன்றியத்தில் கைத்தறி கூடம் திறப்பு விழா

சேரன்மகாதேவி ஒன்றியம் புதுக்குடியில் கைத்தறி நெசவாளர்களுக்கான கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-03-17 08:57 GMT

கைத்தறி நெசவாளர்

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஒன்றியம் புதுக்குடியில் கைத்தறி நெசவாளர்களுக்கான கூடம் திறப்பு விழா இன்று (மார்ச் 16) நடைபெற்றது. புதுக்குடியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.11 லட்சத்தில் நெசவாளர் கூடம் கட்டப்பட்டுள்ளது. இக்கூடத்தை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ராகவன் திறந்து வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News