திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

திருவண்ணாமலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-04-27 16:29 GMT

நீர் மோர் பந்தல் 

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் அறிவொளி பூங்கா பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கழக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான டாக்டர் எ. வ. வே. கம்பன் நீர்,மோர் பந்தலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்,மோர், பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார். அப்போது மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News