திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நீர்மோர் பந்தலை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

Update: 2024-05-06 13:21 GMT

நீர்மோர் வழங்கிய அமைச்சர்

தமிழகம் முழுவதும் முன்பு எப்பொழுதும் இல்லாமல் இந்த ஆண்டு கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற திமுக சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க அறிவுறுத்தல் படி விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ,

கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக திறக்கப்பட்டது இதில் கலந்துகொண்ட நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி சார்பத் வெள்ளரி உள்ளிட்ட பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிதம்பரபாரதி ஜெகன் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News