தென்காசியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

தென்காசியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-04-29 09:36 GMT

தண்ணீர் பந்தல் திறப்பு 

தென்காசி மாவட்டம் தென்காசி நடுப்பேட்டை எஸ்டிபிஐ கட்சி கிளையின் சார்பாக பொன்னிப்பாறை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்த பகுதியில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடுப்பேட்டை கிளை பொறுப்பாளர் சலீம் தலைமை தாங்கினார்.

கோடை கால நகர துணை செயலாளர் ஜாஹிர் உசேன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனா சேனா சர்தார், தென்காசி நகர தலைவர் ஷேக் மைதீன் உள்ளிட்ட ஏராளமான எஸ்டிபிஐ கட்சியினர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News