ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா

சட்டமன்ற துணை சபாநாயகர் கு பிச்சாண்டி திறந்து வைத்தார்

Update: 2023-12-18 06:26 GMT

புதிய பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த வேட்டவலம் அடுத்த அணுக்குமலை ஊராட்சிக்குட்பட்ட பொன்னமேடு, மற்றும் ஆங்குணம் ஊராட்சியில் தலா ரூ.24.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் பன்னியூர் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளிக்கு ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 4 வகுப்பறை கூடுதல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை கடந்த 15-ம் தேதி நடந்தது.விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் அய்யாகண்ணு தலைமை தாங்கினார்.மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு ஆணையாளர் விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு 2 புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து, புதியதாக கட்டப்படவுள்ள 4 வகுப்பறை கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் வேட்டவலம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகையன்,ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தண்டபாணி, சாமிநாதன், சாந்தி, செங்கம் தனி வட்டாட்சியர் ஆதிதிராவிடர் நலன் நடராசன், பொறியாளர் சிவக்குமார்,பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜான் பாப்டிஸ்ட், மரியதாஸ் ஊராட்சி செயலாளர்கள் இளவரசன், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News