நவீன வசதியுடன் கூடிய பயணிகள் பேருந்து நிழற்கூடம் திறப்பு

கூக்கோடப்பட்டி பகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (MPLADS) நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதியுடன் கூடிய பயணிகள் பேருந்து நிழற்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

Update: 2024-02-16 06:09 GMT
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரூர் சட்டமன்றத் தொகுதி - அரூர் ஒன்றியம், கூக்கோடப்பட்டி பகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (MPLADS) நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதியுடன் கூடிய பயணிகள் பேருந்து நிழற்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வே.சௌந்திர ராசு, மாவட்ட கழக துணை செயலாளர் செ.கிருஷ்ண குமார், பொதுக்குழு உறுப்பினர் குட்டி, தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பி.என்.சி.மகேஷ்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.செல்ல துரை, ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News