மதுராந்தகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு: திமுக மாவட்டசெயலாளர் பங்கேற்பு

மதுராந்தகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் திமுக மாவட்டசெயலாளர் பங்கேற்றார்.

Update: 2024-05-06 09:59 GMT
தண்ணீர் பந்தல் திறப்பு விழா, எம்எல்ஏ பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்தியசாய் ஏற்பாட்டில் பொதுமக்களை வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ளும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி வையாவூர் கூட்டுச்சாலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், பழ வகைகள், குளிர்பானங்கள், உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் வையாவூர் ஏழுமலை, தனசேகர் வையாவூர் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தண்ணீர் பந்தலில் கோடைகாலம் முழுவதும் தினந்தோறும் பொதுமக்களுக்கு நீர், மோர், உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்படும் என வையாவூர் ஊராட்சி திமுக சார்பில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News